நாளை காலை பொது மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படும்- முதலமைச்சர்

முதல்-அமைச்சர் வாழ்த்து
முதல்-அமைச்சர் வாழ்த்து

நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி நாளை காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதல்-அமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.