தேர்தல் ஆணைய குழு இன்று சென்னையில் ஆலோசனை !

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தேர்தல் தேதியை முடிவு செய்ய வசதியாக மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் குறித்த விபரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹூ,தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன் படுத்தக்கூடிய மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் தமிழகத்தில் வாக்குச்சாவடிகளில் எண்ணிக்கை 93 ,000 ஆக உள்ளததாக மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தமிழக தேர்தல் பற்றி ஆலோசனை நடத்த இன்று சென்னை வருவதாக கூறினார்.