சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெற மாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் போட்டி நேற்று தொடங்கியது மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் முதல் ஐபிஎல் போட்டி பரபரப்பாகவே இருந்தது சென்னை மும்பை அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சென்னை அணி தரமான விளையாட்டை வெளிப்படுத்தியது .சென்னை அணியின் ஆல்ரவுண்டரான பிராவோ இன்னும் இடம்பெறவில்லை.
இது குறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ,சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெற மாட்டார் என தெரிவித்துள்ளார் முட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ள நிலையில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார்.