₹50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பங்குச்சந்தை நிபுணர்

பங்குச்சந்தை நிபுணர், ஆப்ஷன் டிரேடர் பி.ஆர். சுந்தர், கொரானா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். இதனை அவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.

கொரோனா நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்திருப்பது பற்றி பி.ஆர்.சுந்தர் கூறும்போது, “குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் நான் எனது கம்பெனி கணக்கு மூலம் செய்யும் ஆப்ஷன் டிரேடிங்கில் கிடைக்கும் லாபத்தில் 25 சதவிகித தொகையை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க முடிவு செய்திருந்தேன்.

ஏப்ரல் 1 முதல் மே 16 வரையில் என் கம்பெனி அக்கவுன்டில் செய்த ஆப்ஷன் டிரேடிங் மூலம் கிடைத்த லாபம் சுமார் 2 கோடி. அதில் 25%, அதாவது ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன். கடந்த முறை கொரானா நிதியாக ரூ. 85 லட்சம் கொடுத்துள்ளேன்” என்றார்.