புறநகர் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி!

கொரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பீக் நேரம் ஆன காலை 7 மணி முதல் 9 மணி மற்றும் இரவு 4.30 மணி முதல் 7 மணி வரையும் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்த தடை நீடிக்கிறது.முதல் நாளான இன்று பொது மக்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.