இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!!!

புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க கர்நாடக மாநிலத்தில், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 வரையில் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு, இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.