கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை, ராமச்சந்திரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்திய ராமச்சந்திரனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

படுகாயமடைந்த இருவரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், ரயில் நிலைய வளாகத்தில் நடந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த ஸ்வேதா குரோம்பேட்டையை சேர்ந்தவர், ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு பற்றி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் அன்பில் மகேஷ்