கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சென்னை முதலிடம்

நாட்டின் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவின் போர்டலில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, சென்னையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 24.4% ஆக உள்ளது.

இது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவை விட அதிகம். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 7.5% மட்டுமே என்றாலும், இது மற்ற நகரங்களை விட அதிகம்.

சென்னை 80,00,000 பேருடன் மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்டது. மும்பையில் 2 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.

அதேபோல் டெல்லியில் 3 கோடிக்கும் , பெங்களூருவ1கோடியே 20 லட்சத்திற்கும், ஹைதராபாத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.