தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு கேரளம் முதல் மகாராஷ்டிரா வரையிலான வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

13 மற்றும் 14 ம் தேதி மேற்கு மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையை பெய்யும்,மேலும் 15 மற்றும் 16 ம் தேதி தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது.