தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்ட செய்தி குறிப்பில்,தென்மேற்குப் பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோயமுத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் ஆகஸ்ட் 3 முதல் 7 ம் வரை தென் மேற்கு வங்கக் கடல், தென் கிழக்கு இலங்கைப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.