தமிழகத்தில் கனமழை நீடிக்கும் !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி,கோவை, கிருஷ்ணகிரி,புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.