கரோனா தொற்றின் எண்ணிக்கை நாடு முழுவதும் பரவி அதிகரித்து வருகிறது.மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நோய் பரவல் அதிகம் உள்ளது.
கர்நாடகா,டெல்லி,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிவருவதை தடுக்கும் வகையில், தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.