தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் !

தமிழகம் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வடகடலோர கேரளா வரை வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி,நெல்லை ,தூத்துக்குடி யில் மிதமான மழையும் மற்றும் பிற தென்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கரூர்,ஈரோடு,திருச்சி மாவட்டங்களுக்கு 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் லேசான மேகமூட்டத்தோடு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.