தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு !

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறிவித்த பொதுமுடக்கம் தீவிரமாக கடைபிடிக்க படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக குறைந்தாலும் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவல் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு சில ஆலோசனைகள் வைக்கப்பட்டதாகவும், அதனால் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப்பின் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிகிறது.