கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி – கடலூர் !

கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்ட சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் கடந்த 8-ஆம் தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதியானது.

இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

இதை போன்று மூன்று பேர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தில் 3 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.