மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலி – மத்திய அரசு

மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய், எல்லை பாதுகாப்பு படையில் 28,926 பணியிடங்களும்,மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 20,506 பணியிடங்களும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும் எஸ்எஸ்பியில் 18,643 பணியிடங்களும், இந்தோ திபெத் படையில் 5,784 பணியிடங்களும், அசாம் ரைபிள் பிரிவில் ,328 பணியிடங்களும் காலியாக உள்ளன என்றார்.

பணி ஓய்வு, பணி விலகல் காரணமாக பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதில் 60,210 காவலர் பணியிடங்களுக்கும், 2534 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 330 உதவி போன்ற பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here