கால்வாய்க்குள் விழுந்து பேருந்து – மத்திய பிரதேசம் !

மத்திய பிரதேசத்தில் சிதி என்னும் பகுதியில் இருந்து சாட்னாவிற்கு 50 கும் மேற்பட்ட நபர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது. பயணிகளுடன் பயணித்து கொண்டிருக்கும் பொது திடீரென்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் நீரில் மூழ்கி 32 பேர் பலியாகினர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிறகு செய்தி தெரிவிக்கபட்டு மீட்பு குழுவினருக்கு சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் மீட்பு குழுவினர் 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.