பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை !

கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை
கணவன் வீட்டில் கழிப்பறையில்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால், 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்புரத்தை சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய், அதிக நேரம் செல்போனில் பிரீ பயர் கேம் விளையாடியுள்ளார். இதனை கண்டித்த அவனது தாயார், படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார்.

தாயின் கண்டிப்பால் சிறுவன் மனமுடைந்தாக கூறப்படும் நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உள்ளனர்.மேலும் இது குறித்து விசாரணை நடை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க : அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறை !