பாக்கிஸ்தான்:லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு !

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஜோஹார் டவுன் பகுதியில் ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு அருகே பயங்கர குண்டுவெடிப்பில் சம்பவம் நடந்துள்ளது.இதில் 16 பேர் காயமடைந்து இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூர் ஹபீஸ் சயீத்தின் இல்லத்திலிருந்து 120 மீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கின்றனர்.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணிகளைத் தொடங்கின.

காயமடைந்தவர்கள் தனியார் கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வழியாக லாகூரின் ஜின்னா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறின.ஒரு அடையாளம் தெரியாத நபர் வீட்டின் அருகே ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.