மும்பை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலில் தண்ணீர் என நினைத்து சானிட்டைசரை குடித்த உதவி ஆணையர் !

முன்பெல்லாம் மேஜை மீது தண்ணீர் பாட்டில் தகத்திற்காக இருக்கும்.ஆனால் இந்த கரோனா தொற்று வந்த பிறகு சானிட்டைசரை தான் அதிகம் இருக்கிறது.தண்ணீர் மற்றும் இந்த சானிட்டைசரை இந்த இரண்டுக்கும் போட்டி நடைபெறுகிறது.

மும்பை மாநகராட்சியில் அடுத்த நிதியாண்டுக்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை ஆணையர் இக்பால் சிங் சகல் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது உதவி ஆணையர் ரமேஷ் பவார் தனக்கு முன் இருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் என நினைத்துக் குடித்தார்.பின்பு அது சானிட்டைசர் எனத் தெரியவந்ததும் பின்னர் அதை வெளியே துப்பிவிட்டார்.