பிரசாந்த் கிஷோர்-பாஜக ட்வீட் !

கடந்த மக்களவைத் தேர்தலில் அங்கு தனது தடத்தை பதித்த பாஜக, வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என தற்போது இருந்தே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது.

அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் தற்போது முதலமைச்சர் மம்தாவுக்கு தற்போது தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்துவருகிறார்.வரும் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கை கூட பாஜக பெறாது. எனது கணிப்பை மீறி பாஜக வெற்றிபெற்றால் ட்விட்டரை விட்டு வெளியேறுவேன்” என கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் தேசிய பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா,பாஜக வென்று ஆட்சி அமைத்தவுடன் நாடு ஒரு தேர்தல் நிபுணரை இழக்கவுள்ளது” என பிரசாந்த் கிஷோரைத் தாக்கியுள்ளார்.