தமிழ்நாட்டில் அடுத்து ஸ்டாலின் ஆட்சிதான்

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று சரத்பவார் கூறியுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவின் புனே பாரமதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலகளில் அசாம் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக தோற்கும். கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பார். திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு சாதகமான அலை வீசுவதாகவும், திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அதில் அவர் கூறியிருக்கிறார்.