செந்தில் பாலாஜிக்கு இதுதான் கடைசி தேர்தல்- அண்ணாமலை

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவை சேர்ந்தவர்களையும்  அண்ணாமலை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுகவினர் தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வந்தால் பாஜகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளோம். திமுக தொடர்ந்து வன்முறையை கடைபிடித்து வருகின்றது.

செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதியில்  இதுதான் கடைசி தேர்தல் இனிமேல் அவர் வேறு தொகுதியை பார்த்து செல்ல வேண்டும்” என கூறினார்.