‘கரோனா நம்மால் பலருக்கு பரவக்கூடாது என்பதாலேயே…’ – பிடன்

நமது நிகழ்ச்சிகளால் கரோனா பரவிடக் கூடாது என்பதாலேயே சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 80 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், இந்தத் தொற்றால் 1.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரவலுக்கு மத்தியிலும் வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வாக்களித்தார்.