கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொரோனா

கொரோனா அறிகுறியையடுத்து கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் மீரட் நகரில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் புவனேஷ்வர் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்படி புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியு நுபுரு தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தம்பதியினருக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படு வருகிறது மே 21 அன்று அவரது தாயாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து குடும்பத்தில் மற்றவர்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் புவனேஷ்வரின் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 63.

புவனேஷ்வர் 2012 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 21 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 48 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் மொத்தம் 246 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.