குங்குமப்பூவில் இருக்கும் அழகின் ரகசியம் !

குங்குமப்பூவை நம் உடலுக்கு உட்கொள்வதன் மூலம் மற்றும் வெளியில் போசுவது மூலமும் நம் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும், ஆன் டி ஆக்சிடென்ட்டும் நிறைந்திருக்கிறது.

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.குங்குமப்பூ மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்யவேண்டும்.இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.பிறகு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் சருமத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.