தமிழகத்திற்கு நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புக்காக நிதி ஒதுக்கீடு -மத்திய அரசு !

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரம், பிகார், புதுச்சேரி மற்றும் மத்தியப் பிரசேத மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையாக ஒட்டுமொத்தமாக ரூ.3,113.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் தமிழகத்துக்கு நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் நிரவி புயல் பாதிப்புக்கு ரூ.63.14 கோடியும், புரெவி பயுல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிகார் மாநிலத்துக்கு ரூ.1,255.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.