மகளின் திருமண நகைகள் அடங்கிய பையை ரெயிலில் வைத்து மறந்த மலையாள நடிகர் !

பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான நாதிர்ஷா தன் மகளின் 100 பவுன் திருமண நகைகளை ரெயிலில் வைத்து மறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நகைகளை மீட்டு நாதிர்ஷாவிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இவரது மகள் ஆயிஷா மற்றும் காசர்கோட்டை சேர்ந்த பிலால் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன் பின்னர் காசர்கோட்டில் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக நாதிர்ஷா தன்னுடைய குடும்பத்தினருடன் கொச்சியில் இருந்து ரயிலில் காசர்கோட்டுக்கு சென்றார்.

மேலும் மகளுடைய 100 பவுன் திருமண நகைகள் மற்றும் பொருட்களையும் அவர் கொண்டு சென்றிருந்தார். காசர்கோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய போது திருமண நகைகள் அடங்கிய பேக்கை அவர் எடுக்க மறந்து விட்டார்.

ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் நடத்திய பரிசோதனையில் சீட்டுக்கு அடியில் பேக் இருந்தது. மீட்டு அவர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த நகைகள் நாதிர்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டன.