IPL 2021 முதல் போட்டி சென்னையில் நடைபெறும் !

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்றன.தற்போது,14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை டெல்லியை எதிர்த்து விளையாடுகிறது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.