மீண்டும் வருகிறது இ-பாஸ் – தமிழ்நாடு !

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வெளிமாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம் எனவும் வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தானிமைப்படுத்தலில் இருந்து விலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.