நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.அதே போல் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதலால் மக்கள் பின்வரும் தேதிகளை குறித்து கொண்டு வங்கி பணிகளை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளவேண்டும்.
இதில் ,ஆகஸ்டு 1 ஞாயிறு, ஆகஸ்ட் 8 ஞாயிறு, ஆகஸ்ட் 14 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்டு 20 மொகரம், 22 -ஞாயிற்று கிழமை,ஆகஸ்ட் 28 4வது சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 ஞாயிறு, ஆகஸ்ட் 30 ஜென்மாஸ்டமி தினம் ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு வங்கி தொடர்பான ஏதாவது வேலைகளில் இருந்தால் விரைந்து முடித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.