புகழ்பெற்ற பாபா கா தாபா உரிமையாளர் தற்கொலை முயற்சி !

டெல்லியில் ‘பாபா கா தாபா’ என்ற பெயரில் தகரக் கொட்டகையில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் காந்தா பிரசாத்.இந்த கடிமான கொரோனா காலத்திலும் தொடர்ந்து உணவகம் நடத்தி வந்தனர்.

தற்போது அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவரது மகன் கூறுகையில், கடந்தாண்டு அவர் பெரும் புகழ் பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்திருந்தனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் நெருக்கடியில் இருந்துள்ளார்.நிதி நெருக்கடி காரணமாக அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். அவருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்றார்.