பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்..!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் மீது தாக்குதல் நடத்திய செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலய இடிப்பு வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, சனிக்கிழமை மாலை, புராண கிலா பகுதியில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டுகளையும் கதவுகளையும் 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி உடைத்தது

வல்பிண்டி போலீசார் விரைவில் அங்கு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர் என்று கோயில் நிர்வாகி ஓம் பிரகாஷ் கூறினார்.

தற்போது கோவில் நிர்வாகி ஓம் பிரகாஷின் வீட்டிற்குக்ம், கோயிலுக்கும் அவரது வீட்டிற்கும் வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பே பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தகக்து.