திமுகவுக்கு எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும்- எடப்பாடி பழனிசாமி

உண்மையை கூறி வாக்கு கேட்டால் திமுகவுக்கு எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழக அரசு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுவதாகவும், வரும் தேர்தலுடன் திமுக காணாமல் போய்விடும் எனவும் விமர்சித்தார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, மகன் ஸ்டாலினை நம்பியது இல்லை என்றும் கூறினார். அதிமுகவில் சாதாரண தொண்டன் உண்மையாக உழைத்தால் எம்எல்ஏ, எம்பியாக ஆகலாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.