நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் !

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் 140 பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தி அங்கிருந்த காவலர்களைச் சுட்டு, சுமார் 140 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதற்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.நைஜீரிய நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.