முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்துவரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமி, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி கந்தசாமி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் முதல்வருடன், டிஜிபி கந்தசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் சூழலில் முதல்வரை டிஜிபி சந்தித்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.