ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தொற்று – அண்ணா பல்கலைக்கழகம் !

நாளுக்கு நாள் பரவி வரும் கரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே சென்று தங்களது பணியை செய்து வரும் நிலையில் பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டம் கூட கூடாது என கூறியுள்ளனர்.