இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்திய அளவில் ஆந்திரா கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் 6ஆவது இடத்தில் உள்ளது.
தொற்று காரணமாக தாய், தந்தையை இழந்து பல குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில் அவர்கள் பயன்பெறும் வகையிலான அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு டெபாசிட் செய்யப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.