பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா.மேலும் விஜய் டிவி யில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நிறைய விமர்சனங்களுக்கு ஆளானவர்.
தற்போது இவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது என்றும் சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தில் வீடு திரும்புவேன். நலம் பெற்றவுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் விரைவில் குணமடைய நண்பர்கள் மற்றும் நடிகர் ,நடிகைகள் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.