சென்னை வந்தடைந்த 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை வரும் 12-ம் தேதிக்குள் 15.87 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்குவதாக கூறியது.அதன்படி, 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது வந்த தடுப்பூசியை மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்துவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.