100 நாள் வேலைக்கான ஊதியம் உயர்வு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியது.இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது.இதனை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கியது.

அந்தவகையில் ,ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றிய 32 லட்சம் பேருக்கு தின ஊதியத்தை ரூ.207-லிருந்து 50 உயர்த்தப்பட்டு ரூ.257 ஆக வழங்குவதாக ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இதற்காக ரூபாய் 532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த நிதி அவர்களுக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.