ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு காணாமல் போய்விட்டது- அன்பில் மகேஷ்

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ‘ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு காணாமல் போய்விட்டது. அதை மீட்கும் பணியில்தான் புதிய அரசு ஈடுபட்டுள்ளது’ என கூறினார்.

தமிழகத்தில் அதிமுகவின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த வரை மாநில உரிமையும், நிதி நிலைமையும் சரியாக இருந்ததாக திமுக அமைச்சர்களே பலமுறை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியது கவனம் பெற்றுள்ளது.