அரசு கலைக் கல்லூரி, “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றப்படும்- பொன்முடி

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என்று பெயர் மாற்றப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அறியவும், மாறி வரும் கால நிலையை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு தேவையான உத்திகளை கண்டறியும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் புதிதாக தொடங்க திட்டம் போன்றவை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.