விவசாயிகள் பேராட்டம்: குழுத் தலைவர்களுடன் பேசிய அமித் ஷா!

வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதை மட்டும்தான் கேட்க இருக்கிறோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ருத்ரு சிங் மான்சா சிங்கூ தெரிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கும், அரசிற்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் டெல்லி முழுமையாக முடக்கப்பட்டு, அனைத்துச் சாலைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.