தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தமிழக முதல்வர் மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துவருகிறார்.
முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார்.இந்த கடுமையான சூழலிலும் காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.
அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல் துறையினருக்கு ரூ.5,௦௦௦ வீதம் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.