அமர்நாத் யாத்திரை ரத்து

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக இந்தாண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து ஜூலை 21-ல் துவங்க வேண்டிய அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்தது.

தற்போது கொரோ இரண்டாம் அலை துவங்கி சற்று ஒய்ந்து வந்த போதிலும், யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும், மீண்டும் கொரோனா பரவ வாய்புள்ளதை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரை இந்தாண்டும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும், பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. .