புதுவையில் விமான சேவைக்காக ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல் !

புதுவையில் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென மத்திய அமைச்சரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு, மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று, புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக, விமான ஓடுதளம் பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

மேலும் காரைக்கால் கோயில் நகரத்தை உதான் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில், சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.