தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடக்காது- அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்கூறு இல்லை” என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோயில்களில் உள்ள யானைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. பாகன்களும், இரு நேரமும் நடைபயிற்சியில் ஈடுபடுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல், கோயில்களில் யானைகளில் நீச்சல் குளம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், யானைகளை மொத்தமாக அழைத்து வந்து, யானைகள் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.