நடிகர் ஆர்யாவுக்கு டபுள் கொண்டாட்டம் !

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா இருவருக்கும் கடந்த 2019 வருடம் திருமணம் ஆனது.தற்போது ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்துள்ளது.

சார்பட்டா படத்தின் வெற்றியில் இருந்த நடிகர் ஆர்யாவுக்கு மீண்டும் ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.ஆர்யா சாயிஷா தம்பதிக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை, நடிகர் விஷால் தனது சமூக வலைதளம் பக்கம் வழியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது,இந்த சந்தோஷமான விஷயத்தை பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடைய சகோதரன் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. படப்பிடிக்கும் இடையில் இருக்கும் எனக்கு, நான் மாமா ஆகியுள்ளேன் என்ற இந்த செய்தி விவரிக்க முடியாதளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.மேலும் இருவருக்கும் வாழ்த்துகள் கூறியுள்ளார்.