மீண்டும் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் தொடரும் நிலை !

கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் எடுத்து அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.

புதிய வடிவம் மிக ஆபத்தானது என்றும் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பிரிட்டனின் சுகாதாரச் செயலர் மேட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.